Pages

Thursday, 26 May 2011

சட்டப்பேரவைத் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்

சென்னை, மே 25: சட்டப்பேரவைத் திமுக தலைவராக மு.க. ஸ்டாலினும், துணைத் தலைவராக துரைமுருகனும், கொறடாவாக அர.சக்கரபாணியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இதற்கான அறிவிப்பை புதன்கிழமை நடைபெற்ற எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்துக்குப் பிறகு திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டார்.
தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலிமாறன் கூட்ட அரங்கில் புதன்
கிழமை நடைபெற்றது.
காலை 11 மணி முதல் 12.15 மணி வரை நடைபெற்ற கூட்டத்துக்கு கருணாநிதி தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் க.அன்பழகன் முன்னிலை வகித்தார்.
பொருளாளரும், கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான மு.க.ஸ்டாலின் உள்பட திமுகவின் 23 எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்றார்கள்.
திமுக ஆட்சியின்போது அரசு கொறடாவாக இருந்த அர.சக்கரபாணி இப்போது திமுக கொறடாவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
பதவியேற்பு: கருணாநிதியும், துரைமுருகனும் பேரவையில் இன்னும் எம்.எல்.ஏ.வாக பதவியேற்காமல் உள்ளார்கள். இது குறித்து கருணாநிதியிடம் கேட்டபோது, பேரவைத் தலைவர் குறிப்பிடும் நாளில் பதவியேற்பேன் என்று செய்தியாளர்களிடம் கூறினார்.
திமுகவின் அணுகுமுறை: பேரவையில் திமுகவின் அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும் என்பது தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. முதல் பட்ஜெட் தொடரில் ஆளுங்கட்சியினரோடு மோதல் போக்கு மேற்கொள்ளாமல் புள்ளிவிவரங்களோடு விவாதங்களில் ஈடுபட வேண்டும் என்று பேரவை உறுப்பினர்களுக்கு கருணாநிதி அறிவுரை கூறியுள்ளார்.
பேரவையின் திமுக தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலினுக்கும் கருணாநிதி பல்வேறு அறிவுரைகள் வழங்கியதாகச் சொல்லப்படுகிறது. பேரவையில் திமுகவுக்கு பிரதான
எதிர்க்கட்சி அந்தஸ்து இல்லாவிட்டாலும் அந்த இடத்தில் இருப்பதாக நினைத்துச் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்றும் கூறினாராம்.

No comments:

Post a Comment