தமிழக சட்டப்பேரவை தேர்தலின் போது அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறிய மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மீதான வழக்கை காவல்துறையினர் விசாரிக்க தடை மேலும் நீடித்து மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, துணை மேயர் பி.எம்.மன்னன், மேலூர் ஒன்றிய தி.மு.க செயலர் ரகுபதி, ஒத்தப்பட்டி திருஞானம் ஆகியோர் மீது கீழவளவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கை காவல்துறையினர் விசாரிக்க தடை விதித்து மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டது. இந்த நிலையில் நேற்று அந்த வழக்கு நீதிபதி பி.ராஜேந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுவை விசாரித்த நீதிபதி ராஜேந்திரன், ஏற்கனவே விதிக்கப்பட்ட தடையை மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டித்து உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 1ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, துணை மேயர் பி.எம்.மன்னன், மேலூர் ஒன்றிய தி.மு.க செயலர் ரகுபதி, ஒத்தப்பட்டி திருஞானம் ஆகியோர் மீது கீழவளவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கை காவல்துறையினர் விசாரிக்க தடை விதித்து மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டது. இந்த நிலையில் நேற்று அந்த வழக்கு நீதிபதி பி.ராஜேந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுவை விசாரித்த நீதிபதி ராஜேந்திரன், ஏற்கனவே விதிக்கப்பட்ட தடையை மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டித்து உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 1ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
No comments:
Post a Comment